#BigBreaking | இடைக்கால தடையா? ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்! அதிரடி உத்தரவு!  
                                    
                                    
                                   OPS Case Chennai HC AIADMK EPS 12042023
 
                                 
                               
                                
                                      
                                            
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்ரல் 16ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளதால், ஓ பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
இந்த அவசர முறையீட்டை தொடர்ந்து நீதிபதிகள் மகாதேவன், முஹம்மது சபிக் அமர்வு இன்று இந்த வழக்கை விசாரணை செய்யவதாக அறிவித்தது.

அதன்படி, சற்றுமுன் தொடங்கிய விசாரணையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட இடைக்கால தடை உள்ளிட்ட எந்த தடையும் தற்போது விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கின் இறுதி வாதம் வருகின்ற 20 மற்றும் 21ம் தேதி நடைபெறும் என்றும், தேவைப்பட்டால் 24 ஆம் தேதியும் விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொது குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையத்திற்கு 10 நாள் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       OPS Case Chennai HC AIADMK EPS 12042023