ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே இன்று முதல் ரெயில் சேவை இயக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதிலும், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் ஆங்காங்கே சிறு, சிறு மண் சரிவு மற்றும் ரெயில் பாதை ஓரத்தில் அருவிகள் தோன்றின. 

மேலும், தண்டவாளத்தை மறைத்தபடி தண்ணீர் ஓடியது. இதனால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கடந்த 16 மற்றும் 17- உள்ளிட்ட இரண்டு நாட்கள் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது மழை அளவு குறைந்ததால், மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு இடையே இயக்கப்படும் மலை ரெயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ooty train run from today


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->