"இந்துக்கள் மட்டுமே உள்ளே வரவேண்டும்" - பழனி முருகன் கோவிலில் வைத்துள்ள பேனரால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


"இந்துக்கள் மட்டுமே உள்ளே வரவேண்டும்" - பழனி முருகன் கோவிலில் வைத்துள்ள பேனரால் பரபரப்பு.!!

தமிழ்க்கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி. இங்குள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். 

அவ்வாறு வரும் பக்தர்களுக்காக மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில் சூடம் ஏற்றக் கூடாது, கோவில் வளாகத்தில் டிரம்செட் அடிக்க கூடாது, கைலி அணிந்து வர கூடாது அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாற்று மதத்தைச் சேர்ந்த சிலர் வின்ச் ரெயில் மூலம் மலைக்கோயிலுக்கு செல்ல முயற்சி செய்தனர். இதைப்பார்த்த கோவில் பணியாளர்கள் அவர்களை திருப்பி அனுப்பினர். இந்தது தகவலை அறிந்த இந்து அமைப்பினர் இந்த சம்பவதிற்கு கண்டனம் தெரிவித்தனர். 

இந்த சமயத்தில், பழனி முருகன் கோவிலில் புதிதாக பிளக்ஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Only Hindus should enter palani temple devasthanam info


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->