#விருதுநகர் || பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் பலி!!
One person died in firecracker factory explosion
விருதுநகர் மாவட்டம் மாறனேரி அடுத்த கிச்சனநாயக்கன்பட்டியில் முத்துச்செழியன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட உராய்வின் போது நிகழ்ந்த வெடி விபத்தில் வேம்பு என்ற 60 வயது மதிக்கத்தக்க தொழிலாளி உயிரிழந்தார்.
இந்த வெடி விபத்து குறித்து சிவகாசி தீயணைப்பு துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயணைத்து உயிரிழந்த வேம்புவின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பட்டாசு ஆலை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
One person died in firecracker factory explosion