நாடு திரும்பும் பிரஜ்வல் ரேவண்ணா: லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த போலீசார்.!  - Seithipunal
Seithipunal



கர்நாடகா முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும் ஹசன் தொகுதி எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவை பணிப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்ய அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரது வீட்டிற்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், ரேவண்ணா பெங்களூரில் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என விளக்கம் அளித்தார். 

இதற்கிடையே வெளிநாடு சென்றுள்ள ரேவண்ணா அடுத்த வாரம் நாடு திரும்புவதாகவும் அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் நாடு திரும்பும் ரேவண்ணா எந்த விமான நிலையத்திற்கு வந்தாலும் அவரை உடனடியாக கைது செய்வதற்காக  போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Look out notice for Prajwal Revanna


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->