கடலூர்: ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பிடித்தாக்கி முதியவர் பலி
Oldman killed by lightning in Cuddalore
கடலூர் மாவட்டத்தில் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த முதியவர் இடி தாக்கி உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிட்டமல்லி பகுதியை சேர்ந்தவர் மீனவர் கோபி (66). இவர் நேற்று மாலை வீராணம் ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு படகு மூலம் வலை வீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்ததால், திடீரென இடி தாக்கி கோபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறையினர், உயிரிழந்த கோபியின் உடலை கைப்பற்றினர்.
மேலும் இதுகுறித்து சோழத்தரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Oldman killed by lightning in Cuddalore