கன்னியாகுமரி: 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு.! போக்சோவில் முதியவர் கைது.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அப்பட்டுவிளைப் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வராஜன் (60). இவர் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி கடைசி சென்று விட்டு வீட்டிற்கு சென்ற போது, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமி தாயிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், இது குறித்து குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செல்வராஜனை கைது செய்தனர்.

ஆனால் செல்வராஜன் ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டவர் என்பதால், தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oldman arrested for sexually harassing 4th class girl in kanniyakumari


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->