நகைக்காக மூதாட்டி கொலை., பரபரப்பை ஏற்படுத்திய வாக்குமூலம்..!
Old Woman Murder Near Karur
நகைக்காக மூதாட்டியை கொலை செய்த மூவரை காவல்துறையினர் கியது செய்தனர்.
கரூர் மாவட்டம், முதலைப்பட்டி கிராமம் பகுதியை சேர்ந்தவர் அன்னாச்சி (71). இவர் கடந்த 25ம் தேதி நூறு நாள் வேலை திட்டத்திற்கு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர்.
அவர் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து மூதாட்டியை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது மூதாட்டி அதிக அளவு நகைகள் அணிந்திருப்பார் என தெரிந்த நிலையில் நகைக்காக கொலை நடந்திருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சத்யா என்பவர் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. மூதாட்டியிடம் சத்யா பணம் கேட்டுள்ளார். ஆனால், மூதாட்டி தரவில்லை இதனால், தனது மகன் மூலம் மூதாட்டியை வர வழைத்து உறவினருடன் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளார்.
இதனை, அடுத்து மூதாட்டியின் நகைகளை எடுத்து கொண்டு அவரின் உடலை சாக்கில் கட்டி அங்குள்ள காவேரி ஆற்றில் வீசியதாக தெரிவித்தனர். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Old Woman Murder Near Karur