சமையல் செய்யும் மூதாட்டிக்கு நடந்த விபரீதம்.. திருநெல்வேலியில் நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


சமையலறையில் இருந்து தீப்பற்றியதில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு திருமணமாகி பேச்சியம்மாள்  என்ற மனைவி இருக்கிறார். சம்பவதன்று அவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவர் உடையில் தீப்பற்றியது.

உடலில் தீப்பற்றியதால் அவர் கூச்சலிட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Old Woman Death Near Thirunelveli


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->