கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்த மருத்துவமனைக்கு சீல் - சேலத்தில் பரபரப்பு.!!
officers seal to salem hospital for revealving unborn child sex
சேலத்தில் கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தைக் கண்டறிந்து கூறியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதையும் மீறி தெரிவித்தால் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து தெரிவிப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் இன்று விரைந்து சென்ற அதிகாரிகள் மருத்துவமனையில் தீவிர சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் போது, மருத்துவமனையில் கர்ப்பிணிகளின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் செய்து கண்டறிந்து தெரிவித்து வந்தது உறுதியானது. இது தொடர்பாக மருத்துவர் கண்ணன் அவரது மனைவி ஜோதி, மேகநாதன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
officers seal to salem hospital for revealving unborn child sex