ரத்தக் கொதிப்பு.. ரத்த கொதிப்பு.. - தம்பிகளால் டென்ஷன் ஆன சீமான்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார். 

ஆனால், அந்த சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னம் ஒதுக்கியது. 

இதற்கும் மறுபுத் தெரிவித்த அவர்கள் படகு, கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தங்களுக்கு ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை, தேர்தல் ஆணையம் நிராகரித்து, “மைக்” சின்னம் தான் என்பதை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி “மைக்” சின்னத்தில் போட்டியிடும் என்று சென்னையில் சீமான் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசத் தொடங்கினார். அப்போது, சீமானின் பின்னால் நின்றிருந்த ஒருவரின் செல்போன் ரிங்டோன், “ரத்த கொதிப்பு ரத்த கொதிப்பு… எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு” என்ற பாடலுடன் சப்தமாக ஒலித்தது. இதனால் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் மிகவும் கோபமடைந்ததால் அந்த நபர் அங்கிருந்து வெளியேறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk leader seeman angry in press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->