அதிகாரிகளை முற்றிகையிட்ட நாதக தம்பிகள்! ஓட ஓட துரத்தி அடித்த திமுக உடன்பிறப்பகள்!
NTK brothers who besieged the authorities Then DMK members chased and beaten
சாலை செப்பனிடும் பணியில் தரம் இல்லை என கேட்ட நாதக தொண்டர்களை அடித்து விரட்டிய திமுக மாவட்ட செயலாளர்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே சாலை செப்பனிடும் பணியானது சுமார் மூன்று கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றது. நேற்று இந்த பணியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தொடங்கி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்றும் சாலையை செப்பனிடும் பணியானது நடைபெற்றது.
இந்நிலையில் சாலை பணியின் தரம் சரி இல்லை எனவும், பழைய சாலையை அகற்றாமல் அதன் மீதே சாலை போடுவதால் அதன் உயரம் அதிகமாகும் என்றும் குற்றம் சாட்டி சுமார் 15க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கட்சி கொடிகளோடு திடீரென அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
சாலை பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்த நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளரிடம் முற்றுகையிட்டு சாலை பணிக்கான நிபந்தனை என்ன என்று நாம் தமிழர் கட்சியினர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அறிந்த ஒப்பந்ததாரரான திமுகவின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் தடிக்கான்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ப்ரான்க்ளின் என்பவரும் அடங்கிய 25 பேருக்கு மேற்பட்டோர் அடங்கிய கும்பல் அப்பகுதிக்கு வந்து நாம் தமிழர் கட்சியினரை ஓட ஓட துரத்தி அடித்துள்ளனர்.
சினிமா காட்சியே மிஞ்சும் அளவுக்கு இச்சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே தடிக்கான்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ப்ரான்கிளின் பகுதியில் நின்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கன்னத்தில் அறையும் விடியோ காட்சியும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
English Summary
NTK brothers who besieged the authorities Then DMK members chased and beaten