சென்னையில் வடமாநில குழந்தைத் தொழிலாளருக்கு நேர்ந்த கொடூரம்.! சம்பளம் இன்றி பணிபுரிந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் வடமாநில குழந்தைத் தொழிலாளருக்கு நேர்ந்த கொடூரம்.! சம்பளம் இன்றி பணிபுரிந்த சம்பவம்.!

ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் குடோன்கள் இருக்கும் இடங்களில் சென்னை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஆர்.டி.ஓ, தாசில்தார் உள்ளிட்டோர் இணைந்து சோதனை நடத்தி  வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று அதிகாரிகள் மண்ணடி மீரா லப்பை தெரு, முக்கர் நல்லமுத்து தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளிட்ட மூன்று இடங்களில் உள்ள குடோனில் சென்னை மாவட்ட குழந்தைகள் தொழிலாளர் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, குடோனில் பணியாற்றிய பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ள பதினொரு குழந்தை தொழிலாளர்களை மீட்டனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பத்து பேர் பீகார் மாநிலத்தையும், ஒருவர் நேபாள மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் குடோனில் காலை 11 மணி முதல் 5 மணி வரையிலும், மீண்டும் 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பணியாற்றி வருவது தெரியவந்தது. 

அதுமட்டுமல்லாமல், இவர்களுக்கு சிறிய அறை கொடுத்து சம்பளம் கொடுக்காமல் வெறும் உணவு மட்டுமே கொடுத்து வேலை வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு உதவி ஆணையர் ஜெயலட்சுமி பேசியதாவது, "மண்ணடியில் மூன்று தெருக்களில் உள்ள  கடைகளில் சோதனை நடத்தி 11 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட குழந்தைகளை முதலில் காப்பகத்தில் ஒப்படைத்து பின்னர் அவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்ப உள்ளோம். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

north states child labours work in chennai without salry


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->