சம்பளம் பத்தவில்லை.. அதனால் தான்.... வடமாநில இளைஞரால் போலீசார் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


சம்பளம் பத்தவில்லை.. அதனால் தான்.... வடமாநில இளைஞரால் போலீசார் அதிர்ச்சி.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பெரியநாயக்கன் பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சோதனை மேற்கொண்டனர். 

அந்த நேரத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தனபதன் என்ற வாலிபர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் விரைந்து சென்று தனபதனை கைது செய்து அவரிடமிருந்து ரூ.30,000 மதிப்புள்ள மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதன் பின்னர் போலீசார் தனபதனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார் தெரிவித்ததாவது:- "ஒடிசா மாநிலத்திச் சேர்ந்த இளைஞர் தனபதன் முதலில் இங்கு கூலி வேலைக்கு தான் வந்துள்ளார். 

அதன் படி அவர் தனியார் தொழில்நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். இருப்பினும் கூலி வேலையில் அவருக்கு போதுமான பணம் கிடைக்கவில்லை என்பதால் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார்" என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

north state man arrested for drugs sale in coimbatore


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->