கொடுத்த காசுக்கு மேல கூவுறண்டா கொய்யால.. ரூ.200 கூலியை வறுத்தெடுத்த நித்தியின் பரபரப்பு வீடியோ..!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த நித்யானந்தா பெங்களூரை அடுத்துள்ள பிடதி பகுதியில் நித்தியானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வந்தார். இவரின் சொற்பழிவை கேட்ட கோடான கோடி பக்தர்கள் மற்றும் பக்தைகள் ஆதரவு பெருகவே., இவரின் கிளைகளும் இந்தியா முழுவதும் செயல்பட துவங்கியது.இவருக்கு இந்தியாவில் உள்ள பக்தர்கள் மற்றும் பக்தைகளை போலவே வெளிநாட்டு ஆதரவும் பெருகியது. 

இவரது செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது என்று எண்ணியிருந்த நிலையில்., பகீரென நடிகை ரஞ்சிதாவுடன் குதூகலமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ உண்மை இல்லை என்று இன்று வரை இரட்டை கால்களில் அமர்ந்து சமாளித்து வரும் நிலையில்., அவ்வப்போது பல சர்ச்சை பேச்சுகளும் பேசி இணையதள நெட்டிசன்களிடம் குட்டு வாங்கி சென்றார். இவரை ஒரு குணசித்திர காமடி நடிகராக இணையத்தளத்தில் உருவாக்கி நெட்டிசன்கள் விளையாடி வந்த நிலையில்., பெரும் அதிர்ச்சியாக குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்கள் எழத்துவங்கியது.

nithyanandha, நித்தியானந்தா, kailaasaa, sri kailaasaa, கைலாசா,

இது தொடர்பாக புகார்கள் அடுத்தடுத்து தொடர்ந்து எழவே., காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அனைவருக்கும் டிமிக்கி கொடுத்து அவ்வப்போது இணையத்தளம் மூலமாக சீடர்களிடையே உரையாற்றி வந்த நிலையில்., ஈகுவாடார் நாட்டில் இருக்கும் தீவிற்கு கைலாசா என்று பெயர் வைத்து., அதனை தனி நாடாக அறிவிக்கும் பணியில் தற்போது தீவிர களப்பணியில் வந்தார். இது தொடர்பாக பல வீடியோ காட்சிகளும் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில்., ஈகுவடார் நாட்டில் நித்தி இல்லை என்றும்., எங்களது நாட்டின் பெயர் அவதூறாக பரப்பப்பட்டு வருவதாகவும்., அவர் ஹைதி என்ற தீவிற்கு தப்பி சென்றுள்ளார் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியானது.

nithyanandha, நித்தியானந்தா, kailaasaa, sri kailaasaa, கைலாசா,

இந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான வீடியோ காட்சியில்., திருவண்ணாமலை பொட்டியடி பையன்., உண்டக்கட்டிக்காக அலைந்த சமயத்தில் என்னை விரட்டி நீங்கள் தான் வளர்த்து விட்டீர்கள் என்று கூறி கதறிய நிலையில்., தற்போது வெளியான வீடியோ காட்சியில் திருவண்ணாமலை தீபத்தை கையில் ஏந்தி வருவதாகவும்., கைலாசா நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என்று அறிவிப்பதாகவும்., கைலாசா நாட்டிற்கு விண்ணப்பங்கள் தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும்., இதற்கு பின்னர் பேசிய நித்தி கைலாசா என்ற தீவை துவங்கும் எண்ணம் இருந்தது என்றும்., இது குறித்து நான் எந்த விதமான முன்னேற்பாடுகள் செய்கிறேன் என்பதை நீங்களே முடிவு செய்து பரப்புகிறீர்கள் என்று நெட்டிசன்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும்., ரூ.200 நீங்கள் வாங்கினாலும் சரி அதற்கு மேல் வாங்கினாலும் சரி., கொடுத்த காசிற்கு கட்டாயம் அதிகமாக கூவாதீர்கள் என்று கலாய்த்துள்ளது பெரும் சோகத்தை நெட்டிசன்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த பல தகவல் பகீரென வெளிவந்துகொண்டு இருக்கும் நிலையில்., தினமும் தனது சீடர்களை இணையத்தின் மூலமாக சந்தித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர் கைது செய்யப்படலாம் என்றும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nithyananda speech about social media fake meme creators


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->