ஈரோட்டில் சோகம் - மின்சாரம் தாக்கி ஒன்பது வயது சிறுவன் உயிரிழப்பு.!!  - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் சோகம் - மின்சாரம் தாக்கி ஒன்பது வயது சிறுவன் உயிரிழப்பு.!! 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குள்ளப்பாளையம், டெலிபோன் நகர், விரிவாக்க வீதியைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார்-ஜனனி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகளும், சாய் தர்ஷன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் சாய் தர்ஷன் நேற்று இரவு தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தார். 

அப்போது சாய் தர்ஷன் விளையாட்டு ஆர்வத்தால் அருகில் மின் கம்பத்தில் இருந்த ஸ்டே வயரை பிடித்துள்ளார். அந்த நேரத்தில் ஸ்டே வயரில் மின்சாரம் பாய்ந்ததால் சாய் தர்ஷனை தூக்கி வீசபட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே சாய் தர்ஷனை மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டி பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சாய் தர்ஷன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சாய் தர்ஷனின் உடலை அவரது பெற்றோர் வீட்டுக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுவனின் வீட்டுக்கு வந்து அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nine years old boy died for attack electric shock in erode


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->