பொங்கல் சீர்வரிசை கொடுத்துவிட்டு வந்த புதுமாப்பிள்ளை.! டிராக்டர் மோதி உயிரிழந்த சோகம்.!
New groom killed in Tractor collision in tiruvarur
சகோதரிக்கு பொங்கல் சீர்வரிசை கொடுத்துவிட்டு வந்த புதுமாப்பிள்ளை டிராக்டர் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் ரகுபதி (37). இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை ரகுபதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சகோதரிக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக சென்றார்.
பின்பு பொங்கல் சீர்வரிசை கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது மறவாதி பகுதி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ரகுபதி பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ரகுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
New groom killed in Tractor collision in tiruvarur