நெல்லையில் அதிர்ச்சி! 9ம் வகுப்பு மாணவனுக்கு கத்தி குத்து! வகுப்பறையிலேயே சக மாணவன் நிகழ்த்திய கொடூரம்!  - Seithipunal
Seithipunal


நெல்லை கேந்திர வித்யாலயா பள்ளி வளாகத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதில், ஒரு மாணவனுக்கு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவன் கத்தியால் குத்தியதில் மற்றொரு மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

புத்தகப் பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீர், மற்றொரு மாணவன் மீது சிந்தியதால் இந்த இரண்டு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது ஒரு மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து, மற்றொரு மாணவனின் தலையில் குத்தியதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 

காயம் அடைந்த மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், பள்ளியின் தரப்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அண்மையில், திருச்சி, ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டியதில், பள்ளி ஆசிரியர் படுகாயம் அடைந்த சம்பவம் அரங்கேறியது. 

ஸ்ரீரங்கம் பகுதியில் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர்.

மாணவர்களுக்குள் நடந்த மோதலை தடுக்கச் சென்ற வணிகவியல் ஆசிரியர் உடன், பள்ளி மாணவர் ஒருவரும் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nellai School Student Attack Knife


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->