நெல்லை | பல்லை பிடுங்கி கொடுமைப்படுத்திய கொடூர போலீஸ் அதிகாரிக்கு சம்மன்!  - Seithipunal
Seithipunal



நெல்லை : கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மூன்று இளைஞர்களை, போலீஸ் அதிகாரி ஏஎஸ்பி பல்வீர் சிங் கட்டிங் பிளேயர் கொண்டு பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் அளித்தனர்.

இதுகுறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், கொடூர போலீஸ் அதிகாரி ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேதாஜி சுபாஷ் சேனா, புரட்சி பாரதம் மற்றும் சில அமைப்புகள் தொடர் போராட்டங்களை அறிவித்தன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று முதல் விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவு படி, விசாரணை அதிகாரியாக சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலமை தனது விசாரணையை இன்று தொடங்கியுள்ளார்.

மேலும், புகாருக்கு உள்ளான போலீஸ் அதிகாரி ஏஎஸ்பி பல்வீர் சிங் இடம், விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளார் விசாரணை அதிகாரி முகமது சபீர் ஆலமை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai Kallidaikurichi ASP Case 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->