நெல்லை டிஎஸ்பி.,க்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி காவல்துறை கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) சுரேஷ்குமார் பணிபுரிந்து வருகிறார். 

இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு குமாரபாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். 

அப்போது அந்த காவல் நிலையத்தில் பதியப்பட்ட இரண்டு வழக்குகளில் சாட்சியமளிக்க சுரேஷ்குமார் நேரில் ஆஜராக வேண்டும் என்று, குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பி உள்ளது. 

ஆனால், சுரேஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கடந்த மார்ச் மாதம் 19ம் தேதியும், கடந்த 7ஆம் தேதி அவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. 

இதனையடுத்து, தற்போது திருநெல்வேலி காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் சுரேஷ்குமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NELLAI DSP


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->