காதலிக்க மறுத்த இளம்பெண் வெட்டிக்கொலை! நாடக காதலனால் நெல்லை பரபரப்பு! - Seithipunal
Seithipunal


நெல்லையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை நாடக காதலன் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி கீழரத வீதியில் அழகு நிலைய பொருள் (பேன்சி ஸ்டோர்) விற்பனை கடையில் பணியாற்றிய இளம்பெண் சந்தியா. இவருக்கு வயது 18.

திருநெல்வேலி மாவட்டம், திருப்பணி கரிசல்குளத்தைச் சேர்ந்த சந்தியாவை இன்று காதலிக்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பேன்சி ஸ்டோர் கடையிலிருந்து அருகில் உள்ள கிடங்குக்குச் சென்று பொருள்களை எடுக்கச்சென்ற சந்தியாவை, இளைஞர் ஒருவன் வெட்டி படுகொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

சந்தியாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்த கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai Drama love kill young girl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->