வந்தவாசி அருகே திருமணத்திற்கு சென்ற பேருந்தில் தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் தாலுகா பெரியகாயம்பாக்கத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன். இன்று காலை இவருடைய மகன் வெங்கடேசனுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து மணமகளின் உறவினர்கள் மற்றும்  நண்பர்கள் என்று சுமார் 40 பேர் வந்தனர்.

இவர்கள் அனைவரும் வந்து செல்வதற்காக சுற்றுலா பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், மீண்டும் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டனர். 

இந்த பேருந்து திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வந்தவாசியை கடந்தபோது பேருந்தில் இருந்து ஏதோ ஒன்று தீயில் கருகியது போல் வந்த வாசத்தை உணர்ந்த பேருந்தின் ஓட்டுனர், இது வேறு ஏதாவது வாசமாக இருக்கலாம் என்று நினைத்து தொடர்ந்து பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். 

பேருந்து வந்தவாசி அடுத்த மேல்மா என்ற இடத்தை கடந்தபோது பேருந்தின் வலதுபுற சக்கரம் திடீரென வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய பேருந்து அருகிலுள்ள பாலத்தில் மோதியது. 

இதில் பேருந்தின் டீசல் டேங்க் பாலத்தில் உரசியதால் திடீரென தீப்பற்றி, பேருந்து முழுவதும் எரிய ஆரம்பித்தது. இதனால் பேருந்தில் உள்ள பயணிகள் அனைவரும் காப்பாற்றுமாறு சத்தமிட்டு, பேருந்தில் இருந்து இறங்குவதற்கு முயற்சி செய்தனர். ஆனால், அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. 

பேருந்து குளிர்சாதன வசதி உள்ளதால் அனைத்து கண்ணாடிகளும் மூடப்பட்டு இருந்தது. இதனால் பயணிகள் அணைபவரும் வெளியில் வர முடியாமல் தவித்தனர்.

அந்த நேரத்தில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுனர் இதை பார்த்து உடனே லாரியை நிறுத்திவிட்டு தான் கொண்டு வந்த இரும்பு ராடால் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பயணிகள் வெளியேறவதற்கு வழியை ஏற்படுத்தினார். 

அந்த வழியின் மூலம் உடனடியாக பயணிகள் அனைவரும் வேகவேகமாக இறங்கினர். இந்த சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக  வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து பேருந்தில் பரவிய தீயை அணைத்தனர். ஆனாலும் பேருந்து முழுமையாக தீயில் எரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near vanthavasi tourist bus fire accident


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->