திருப்பூரில் பரபரப்பு - பனியன் கம்பெனி உரிமையாளரை சரமாரியாகத் தாக்கிய மர்மநபர்கள் - போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் சாலை அருகே பொல்லிகாளி பாளையம் பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வருபவர் கனகராஜ். இவருடைய நிறுவனத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று பலர் வேலை பார்த்து வருகின்றனர். 

இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தொழிலாளர்கள் அல்லாத வெளிநபர்கள் அங்கே வந்து செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. 

இதையறிந்த பனியன் கம்பெனி உரிமையாளர் கனகராஜ் அங்கிருந்த வெளி நபர்களிடம் இங்கே வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார். அப்போது, போதையில் இருந்த நான்கு மர்ம நபர்கள் கனகராஜை ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். 

இதில் பலத்த காயமடைந்த உரிமையாளர் கனகராஜ் மற்றும் ஊழியர்களை நிறுவனத்தில் இருந்து சக தொழிலாளர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirupur mysterious boys attack baniyan company owner and workers


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->