திருப்பத்தூர் : குடும்ப தகராறில் தூக்குபோட்டு தற்கொலை செய்த இளம்பெண்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி சுவேதா. இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது.

இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டதனால், நேற்று மாலை சுவேதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது. சுவேதாவின் உறவினர்கள் அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சென்னை-பெங்களூர் 6 வழி சாலையில் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, சுவேதாவின் சாவிற்கு காரணம் மாமனார், மாமியார் மற்றும் அவருடைய கணவர் தான் என்று கூறினார்கள். இதுகுறித்து தகவலிறந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததால் பேரில் ஸ்வேதாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆவதால் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணை செய்து வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirupatur family problam young woman sucide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->