தாயின் கள்ளக்காதலனால் மகள் கொலை.! தீவிர வேட்டையில் போலீசார்.!
near thiruvalloor mother boyfriend kill daughter
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம், மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அம்சவல்லி. இவர் தனது கணவரைப் பிரிந்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார். இவர் மகள் சங்கீதா.
இந்நிலையில், அம்சவல்லி நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் மகள் சங்கீதா கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் சங்கீதா அணிந்திருந்த கம்மல், கொலுசு, மற்றும் வீட்டில் இருந்த பணம் உள்ளிட்டவையும் கொள்ளை போய் உள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்சவல்லி பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் அளித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அம்சவல்லிக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜூ என்ற நபருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்ததும், அதனால் அவர், அம்சவல்லியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து, சங்கீதாவுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்வதற்கு நிச்சயித்து இருந்தனர். இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ராஜு சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சங்கீதாவை கொன்று நகை-பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ராஜுவை தேடிவருகிறார்கள். அவரைப் பிடித்தால் தான் இந்தக் கொலை பற்றிய உண்மை தெரியவரும்.
English Summary
near thiruvalloor mother boyfriend kill daughter