பிரசவத்தில் உயிரிழந்த மனைவி, குழந்தை.! துக்கம் தாங்காமல் கணவர் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அப்போது ராஜ்குமார் அதே கம்பெனியில் பணிபுரிந்த, அந்தோணியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்தோணியம்மாளுக்கு கடந்த 13 ஆம் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது கணவர் ராஜ்குமார் அந்தோணியம்மாளை பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

ஆனால், பிரசவத்தில் தாய், சேய் இருவரும்  உயிரிழந்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் கதறி அழுதுள்ளார். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொழுது விடிந்தும், வெகு நேரமாக கதவு திறக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, ராஜ்குமார் தூக்கில் பிணமாகக் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவலர்கள் ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near theni young man sucide for wife and baby death in delivery


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->