சேலம் : ஓமலூர் அருகே தற்கொலை  செய்துகொண்ட கர்ப்பிணி பெண் - கோட்டாட்சியர் விசாரணை.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரை அருகே உள்ள கருத்தானூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ்-மகாநதி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருப்பினும் மகாநதி தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ரமேஷ் தனது குழந்தையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள ஊருக்கு சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகாநதி வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

அப்போது, ரமேஷின் உறவினர் ஒருவர், அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு மகாநதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு ஓடிவந்த அவர்கள் மகாநதியை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதற்கிடையே மகாநதியின் பெற்றோர் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார், மகாநதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து, போலீசார், சந்தேகம் மரணம் என்று வழக்குப்பதிவு செய்து மகாநதி எப்படி உயிரிழந்தார்? என்று கணவர் ரமேஷ் மற்றும் அவரது உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் உயிரிழந்ததால், இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near salem pregnent lady sucide


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->