#சேலம் | அரசுப்பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி.. காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு மாணவிகள் சாணிப்பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி செய்துள்ளனர்.

இதனால்,மாணவிகளின் உடல் முழுவதும் விஷம் பரவியதனால் வாந்தி எடுத்துள்ளனர்.  இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், மாணவிகள் இரண்டு பேரையும் அழைத்துச் சென்று சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். 

மாணவிகள் இருவரும் வீட்டுப்பிரச்சினையின் காரணமாக  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது. இது குறித்து வாழப்பாடி போலீசார் மாணவிகளிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near salem government school student sucide attempt


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->