திருமணம் செய்வதாக கூறி ரூ.1.07 லட்சத்தை ஏமாற்றிய கிராம நிர்வாக அலுவலர்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமத்தை சோ்ந்தவர் முனியாண்டி. இவர் மகன் செந்தில்மாரி. இவா் தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறாா். 

இந்நிலையில், இவருக்கும் ஆக்கடா வலசை கிராமத்தை சோ்ந்த களஞ்சியம் என்பவரின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது, பெண்ணின் வீட்டாா் 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட சீா்வரிசை தருவதாக பேசியுள்ளனர்.

இதற்கிடையே, வீட்டு வேலை நடப்பதாக கூறி பெண் வீட்டாரிடம் முன்பணமாக ரூ.1.07 லட்சத்தை செந்தில்மாரி, அவரது உறவினா்கள் காயத்திரி, ராணி ஆகியோா் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. நிச்சயம் செய்த படி அவர்களது திருமணம் கடந்த மாதம் 28-ந் தேதி நடந்திருக்க வேண்டும். ஆனால் அந்த திருமணத்துக்கு மாப்பிள்ளை செந்தில்மாரி மற்றும் அவரது குடும்பத்தினா் வரவில்லை. 

இதையடுத்து, கடந்த 30-ந்தேதி உச்சிப்புளி காவல் நிலையத்தில் களஞ்சியம் புகாா் கொடுத்தாா். அதன் பேரில் செந்தில்மாரி குடும்பத்தினரை விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கும் வரவில்லை. 

அதன் பின்னர், கிராம நிா்வாக அலுவலா் செந்தில்மாரி, அவரது உறவினா்கள் காயத்திரி, ராணி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் உச்சிப்புளி துணை தலைமை காவலர் நாகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near ramanathapuram Village Administrative Officer cheated rupees one lacks


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->