இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மின்கம்பத்தில் மோதி பலி.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே வடுகபாளையத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சண்முகம். இவர் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசூருக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். 

அங்கு வேலையை முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ஜேடர்பாளையம் நோக்கி வந்த இவர் ஜமீன் இளம் பள்ளி, அத்திக்காடு பிரிவு ரோடு அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் மோதி தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். 

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதைப்பார்த்து உடனே ஓடிவந்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near namakkal young man died for bike accident


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->