மதுரையில் பரபரப்பு - பிறந்த குழந்தையை விற்க சொல்லிய தாய் உள்பட 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கடந்த 25 ஆம் தேதி மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிறந்து ஒரு சில நாட்கள் ஆன பெண் குழந்தையை பெண் ஒருவர் சிகிச்சைக்காக கொண்டு வந்தார். 

அவருக்கும் அந்த குழந்தைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருந்ததால் செய்விலியர்கள் குழந்தையின் தாய் யாரென்று கேள்வி கேட்டனர். அதற்கு அந்த பெண் பதில் சொல்லாமல் திணறியதால் சந்தேகமடைந்த செவிலியர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், அவர் உசிலம்பட்டி அருகே உள்ள ஒத்தவீடு கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பது தெரிந்தது. 

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை அவரது தாயே விற்க சொல்லி கொடுத்ததும், குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் சிகிச்சை அளித்துவிட்டு பின்னர் விற்கலாம் என்று நினைத்ததும் தெரிய வந்தது.

அதன் படி, போலீசார் குழந்தையின் தாயிடம் விசாரணை மேற்கொண்டதில், குழந்தையை விற்பனை செய்வதற்கு நான்கு உதவியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near madurai four womans arrested for baby sale attempt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->