ஆசிரியரால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!
near karoor teacher areest in sexual harassment case
கரூர் மாவட்டம் அருகே உள்ள புலியூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவி தனது வீட்டில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையறிந்த பெற்றோர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அந்த விசாரணையில், "மாணவி படிக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் தாந்தோணிமலையை சேர்ந்த பாபு என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனம் நொந்து மாணவி தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்தது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பாபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில், ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near karoor teacher areest in sexual harassment case