திண்டுக்கல் : பருப்பு வடைக்குள் சுண்டெலி.! வலைதளத்தில் வைரலாகும் போட்டோ.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில் விற்பனை செய்யப்பட்ட உளுந்து வடையில், பல்லி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதைத் தொடர்ந்து, நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி அருகே தேநீர் கடை ஒன்றில், பத்து வயது சிறுமி ஒருவர் பருப்பு வடைகளை பார்சல் வாங்கியுள்ளார். அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடுவதற்காக பிரித்துள்ளார். அப்போது, அந்த வடைக்குள் கருகிய நிலையில் சுண்டெலி ஒன்று இருந்ததை கண்டு அச்சமடைந்த சிறுமி அதனை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். 

இதைப்பார்த்து, அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அந்த வடையை தேநீர் கடைக்கு கொண்டு சென்று, இந்த சம்பவம் தொடர்பாக கடைக்காரரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த கடைக்காரர், இனிமேல் இதுபோன்று தவறு நடக்காமல் பார்த்து கொள்கிறேன். இதை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். 

இதற்கு இடையே பருப்பு வடைக்குள் சுண்டெலி இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் தாலுகா உணவு பாதுகாப்பு அதிகாரி ஜாபர் சாதிக், சின்னாளப்பட்டி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கணேசன் உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர்  தேநீர் கடைக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

அங்கு, திறந்தவெளியிலும், பலமுறை பயன்படுத்திய எண்ணெயை வைத்து பலகாரங்கள் தயார் செய்வதையும் கண்டுபிடித்தனர். இதனால், அந்த கடைக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து, இனிமேல்; சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் தயார் செய்தால் தேநீர் கடைக்கு 'சீல்' வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dindukal rat inside dal vada at tea shop


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->