ஒடிசா இளைஞரின் ஆசனவாயில் பம்பை வைத்து காற்றடைத்த கொடூரம்.! பின் நேர்ந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் ஒடிசாவை  சார்ந்த வடமாநில இளைஞர் ஒருவர்  இறந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவருடன் பணியாற்றிய ஆந்திராவைச் சார்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த ஆலம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒடிசாவை சார்ந்த சௌமியா பிரியரஞ்சன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

சம்பவத்தன்று இவருடன் பணியாற்றும்  சாய் ராகவா என்ற ஆந்திராவை சார்ந்தவர் சுத்தம் செய்யும் காற்றுக் குழாயை இவரது ஆசன வாயில் வைத்து விளையாட்டாக இயக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு இருக்கிறார் சௌமியா பிரியரஞ்சன்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை சாய் ராகவாவை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai odisha youth died in a cntroversial way police arrest a man from andhra


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->