தொழில் நஷ்டம்.. தற்கொலை முடிவால் தாய் - மகன் பலி., தந்தை உயிருக்கு போராட்டம்.!
Namakkal Paramathi Velur Family Members Suicide Attempt Mother and Son Died One Hospital Treatment
தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குடும்பத்துடன் மேற்கொண்ட தற்கொலை முயற்சியில் 2 பேர் பலியாகிவிட, ஒருவர் உயிருக்கு போராடி வரும் சோகம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை சேடர் தெரு பகுதியை சார்ந்தவர் சையத் அக்பர் (வயது 60). இவரது மனைவி பாத்திமா (வயது 55). இவர்களது மகன் பர்கத் (வயது 30), மற்றொரு மகன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.
பல வருடமாக சையத் அக்பர் டிராக்டர் டிப்பர் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வந்த நிலையில், தற்போது டிராக்டர் டிப்பர் விற்பனை ஆகாமல் இருந்துள்ளது. இதனால் கடந்த சில மாதமாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், விரக்தியில் சையத் அக்பர் குடுமபத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, நேற்று இரவு 11 மணியளவில் சையத் அக்பர், பாத்திமா, பர்கத் ஆகியோர் குளிர்பானத்தில் விஷம் கலந்துகுடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு தாங்க இயலாத அளவு வயிறு எரிச்சல் ஏற்பட்டு அவதியுள்ளனர்.
பின்னர், இதுகுறித்து உறவினர்களுக்கு தகவலை தெரியப்படுத்தவே, அவர்கள் வீட்டிற்கு சென்று பார்க்கையில் 3 பேரும் மயக்க நிலையில் இருந்துள்ளனர். அவர்களை உடனடியாக மீட்டு பரமத்திவேலூர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர்.
மருத்துவமனையில் மூவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பர்கத் இறந்துவிட்டதாக தெரிவிக்கவே, பாத்திமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர்களில் சையத் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பரமத்தி வேலூர் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Namakkal Paramathi Velur Family Members Suicide Attempt Mother and Son Died One Hospital Treatment