மது அடிமை கணவன்.. தீர்த்துக்கட்ட திட்டம்..! நண்பன் என்ற போர்வையில் ஒரு காமுகன்.!  - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் ஏரி தெரு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்-செல்வி தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். வெங்கடேசன் குடிபோதைக்கு அடிமையான காரணத்தால் தினமும் செல்வியை குடித்துவிட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையில் காவேரி நகர் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருடன் செல்விக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. தனது கணவன் தினமும் செய்யும் கொடுமைகளை அவருடைய நண்பரிடம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கடந்த 8ம் தேதி வெங்கடேஷுக்கு அதிக அளவில் பெருமாள் மது வாங்கி கொடுத்து இருக்கின்றார்.

அப்போது குடிபோதையில் இருந்த வெங்கடேசனை காவிரி ஆற்றுப் பாலத்தில் அழைத்துச் சென்று அங்கிருந்து பெருமாள் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். வெங்கடேஷ் கொலை குறித்து வெளியில் யாரிடமும் தெரிவிக்காமல் இருக்க தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டி வற்புறுத்தி உள்ளார். 

செல்வியும் வேறு வழியில்லாமல் ஈடுபட்டுள்ளார். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத செல்வி காவல் நிலையத்தை சரணடைந்து உண்மையை ஒப்புக்கொண்டார். இதனடிப்படையில் தலைமறைவான பெருமாளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், வெங்கடேசன் சடலம் இருக்கின்றதா என்பது குறித்து காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

namakkal murder in cauvery river


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->