இரட்டிப்பு பணம் என சிலிர்த்துப்போன வாலிபரின் தலையில் மிளகாய் அரைத்த கும்பல்..! மக்களே உஷார்.! - Seithipunal
Seithipunal


பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி, ரூபாய் நோட்டுகள் நடுவே வெள்ளைத் தாள்களை வைத்து ஏமாற்றிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வண்டிக்காரன் தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரிடம் சேர்ந்தமங்கலம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மற்றும் மணிமாறன் ஆகியோர், தங்களுக்கு தெரிந்த நபர்களிடம் கணக்கில் வராத கருப்பு பணம் அதிகளவில் இருப்பதாகவும், அதனை மாற்றிக் கொடுத்தால் இரட்டிப்பு பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளனர். 

இதனை நம்பி வாயை பிளந்த வெங்கடேசன், ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்த நிலையில், அதற்கு பதிலாக 100 ரூபாய் நோட்டுக்கட்டை கொடுத்துவிட்டு, இருவரும் காவல்துறையினர் வருவதாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

இதனைத்தொடர்ந்து பணத்தை பிரித்து பார்க்கையில், மேல் பகுதி மற்றும் அடிப்பகுதி ரூபாய் நோட்டிற்கு நடுவில் வெள்ளை பேப்பர் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான வெங்கடேஷ், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பாஸ்கரன் மற்றும் மணிமாறன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Fraud Gang Arrest By Police 7 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->