நான் யார் தெரியுமா?.. எனக்கு பின்னாடி?.., சிறுமியை நிர்வாணப்படமெடுத்து மிரட்டிய கொடூரன், டி.எஸ்.பியிடம் தெனாவட்டு பேச்சு.! - Seithipunal
Seithipunal


சிறுமியை நிர்வாணமாக படம் எடுத்து வைத்து மிரட்டிய கொடூரன், "மகள் வரவில்லையென்றால், தாயான நீ என்னுடன் உல்லாசமாக இருக்க வா" என்று மிரட்டிய கொடூரம் சம்பவமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமே "என்னை உன்னால் என்ன செய்ய முடியும். என்னை வெளியே எடுக்க ஆட்கள் வருவார்கள்.. நீ போ" என்று மிரட்டிய பயங்கரமும் அரங்கேறியுள்ள கொடூர தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்மணி, தனது மகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள அலைபேசி வாங்கி கொடுத்துள்ளார். இந்த பெண்மணிக்கு ஒரு மகனும் உள்ள நிலையில், தாயும் மகனும் வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் சிறுமி தனியாக இருந்து வந்துள்ளார். இதன்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தன் பெயரில் கணக்குகளை உருவாக்கிய சிறுமி, தனது புகைப்படம் மற்றும் குடும்ப புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். 

இந்நிலையில், சிறுமியின் தாயாரது வாட்ஸ்சப்பில் மாணவியை கொச்சையான வார்த்தைகளால் திட்டி, நிர்வாணப்படம் அனுப்பி வைக்க கூறி காமுகன் செய்தி அனுப்பியுள்ளான். இதை கேட்ட தாய் விசாரணை செய்யவே, மாணவி அழுதபடி தனக்கு நடந்த கொடூரத்தை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் விழுப்பானூர் பகுதியைச் சார்ந்த காமுகன் தமிழ்ச்செல்வன், முகநூல் மூலமாக சிறுமிக்கு அறிமுகமாகி இருக்கிறான். 

இவன், சிவகாசி உள்ள அனுப்பன்குளம் பகுதியில் மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறான். முதலில் அண்ணன் போல பழகிய தமிழ்ச்செல்வன், நாளடைவில் மாணவியை காதலிப்பதாக கூறிய நிலையில், காலப்போக்கில் காமுகனின் சுயரூபம் தெரியாமல் அவனை நம்பி தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் முகநூல் பக்கங்களில் பாஸ்வேர்டையும் கொடுத்துள்ளார். பின்னர் ஒரே ஒருமுறை நான் உன்னை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என்று கூறி கட்டாயப்படுத்தவே, விவரமறியாத மாணவியும் வீடியோ காலில் தமிழ்ச்செல்வன் கூறியபடி பேசியுள்ளார். 

இதனை ரெக்கார்ட் செய்து கொண்ட கொடூரன், முதலில் அண்ணன் போல பேசி பின்னர் காதலில் வீழ்த்தி, "நீ என்னிடத்தில் நடந்தது போல தான், மற்ற ஆண்களிடமும் நடந்து கொள்வாய்" என்று கூறி துன்புறுத்தியுள்ளான். மேலும், உனது அழகை எனது நண்பர்களும் ரசிக்கட்டும் என்று கூறி, தன் நண்பர்களுக்கும் சிறுமியின் நிர்வாண புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளான். மேலும், சிறுமியின் தாய்க்கும் இதனை அனுப்பி வைத்துள்ளான். 

இதனைக்கண்ட சிறுமியின் தாய் என்னையும், எனது மகளையும் விட்டுவிடும் படி கெஞ்சி கேட்கவே, "அவள் இல்லையென்றால் என்ன?. நீ நிர்வாணமாக வீடியோ கால் பேச வேண்டும்" என்று காமுகன் மிரட்டியுள்ளான். இதனால் பயந்து போன சிறுமியின் தாயும், மகனும் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், கடந்த 4 நாட்களாக வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்த காவல்துறையினரால், அதிர்ச்சியடைந்த குடும்பம் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேலை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர். 

இதனையடுத்து மாணவியின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களை ஆராய்ந்த காவல் அதிகாரி, மாணவிக்கு நடந்த கொடுமைகளை உணர்ந்துள்ளார். இதனையடுத்து தனிப்படை அமைத்து அன்று இரவே தமிழ்ச்செல்வனை அதிரடியாக கைது செய்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் விசாரிக்கையில், காவல்துறை கண்காணிப்பாளர் இடத்திலேயே அதிகாரமாக பேசிய தமிழ்ச்செல்வன், "தனக்கு ஆதரவாக பலர் வருவார்கள். என்னை வெளியே எடுக்க வழக்கறிஞர் அணி வரும். என் தூசிபட்டால் அவ்வுளவுதான்" என்று கூறியுள்ளான். 

சுமார் 2 மணிநேர விசேஷ கவனிப்புக்கு பின்னர், ராசிபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திராவிடம் தமிழ்ச்செல்வனை ஒப்படைக்கவே, அவர்கள் காமுகன் தமிழ்ச்செல்வனை புதுமாப்பிள்ளை போல கவனித்து இருக்கின்றனர். மேலும், காவல் அதிகாரியிடம் தெனாவட்டாக பேசியுள்ளான் என்றும், மாப்பிள்ளை கவனிப்பு கிடைத்துள்ளது. இதன்பின்னர், விசாரணை என்ற பெயரில் மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளனர். 

காவல்துறை அதிகாரிகளால் பதறிப்போன மாணவி, தங்களுக்கு வழக்கும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் எப்படியாவது பிழைத்துக்கொள்கிறோம் என்று கூறி அழுதுள்ளார். இதனையடுத்து இந்த விஷயம் காவல் கண்காணிப்பாளர் சக்திவேலுக்கு தெரியவரவே, காவல் ஆய்வாளர் இந்திராவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து, நாமக்கல் மாவட்ட ஏ.டி.எஸ்.பி தலைமையில் நேரடி விசாரணையின் நடைபெற்று, காமுகன் தமிழ்ச்செல்வனின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைந்துள்ளனர். 

பெண்களை பாதுகாக்க வேண்டியது, அவர்களின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டியது பெற்றோரின் கடமையாக இருந்தாலும், பெண்களும் சுத்தரிப்புடன் செயல்பட வேண்டியது இங்கு தெளிவுபடுத்த வேண்டியது. இளம்வயதுள்ள பெண்களை குறிவைத்து தாய் போலவும், தந்தை போலவும், அண்ணன் போலவும் என ஆசை வார்த்தை கூறி பேசி, அவர்களிடம் உள்ள சொத்துக்கள் அடைய முயற்சிப்பது அல்லது பலாத்காரம் செய்ய நினைப்பது என காமுக கூட்டம் ஒன்று திட்டமிட்டே சுற்றிக்கொண்டு வருகிறது.

இதுபோன்ற கும்பல்களின் பாசம், காதல் என்ற மாய வலையில் விழாமல் சிறுமிகள் இருந்தால் பிரச்சனை இல்லை. இதனைப்போன்று எந்த பிரச்சனை என்றாலும் முதலில் பெண்கள் வீட்டில் உள்ள தாய், தந்தையிடம் விஷயத்தை தெரியப்படுத்துங்கள். பழகும் சில நாட்களில் பெண்களை கவரும் வகையில் பேசி, வாழ்நாட்களில் மறக்க முடியாத அளவிற்கான துன்பத்தை இவர்கள் கொடுத்துவிடுவார்கள். இவர்களை சட்டப்படி பாதுகாக்க பணமும், வழக்கறிஞர் அணியும், இவர்கள் சார்பு அமைப்பும் இயங்கி வருகிறது என்பதை மறுக்கவும் முடியாது. 

எச்சரிக்கையை மீறி அறியாமை மற்றும் புரட்சி என்ற பெயரில், நான் அனுபவித்துத்தான் விஷயத்தை  தெரிந்துகொள்வேன் என்று ஆசைப்படுபவர்கள் நிலை என்னவாகும் என்பது பிரச்சனை முடியும் போது தான் தெரியும் என்பது தான் எழுதப்படாத நிதர்சனம். இதுபோன்ற காமுக கும்பலுக்கு காசு, பணம், உடல் தேவை மட்டுமே முக்கியமானது. நீங்கள் காலில் குடும்பத்தோடு விழுந்து கதறினாலும், காதில் கேட்காது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Drama Love Culprit Arrest by DSP Intimidating speech Shocking News 7 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->