14 வருடமாக டிமிக்கி கொடுத்த ரவுடியை, நேக்காக தூக்கிய சேலம் காவல்துறை.!!
Nagapattinam rowdy arrest by police
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் தென்கரை பகுதியில், கடந்த 2006 ஆம் வருடத்தில் பயங்கர சப்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்து இருந்தது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குமார் என்ற ரவுடியை தேடி வந்தனர்.
ஆனால், குமார் காவல்துறையினர் வசம் சிக்காமல் கடந்த 14 வருடமாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், குமாரை தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில், குமார் சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினர் இரகசிய கண்காணிப்பை தீவிரப்படுத்திவந்த நிலையில், அங்கு சுற்றி வந்த குமாரை கைது செய்தனர். இந்த விஷயம் தொடர்பான தகவலை நாகப்பட்டினம் காவல் துறையினருக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றனர்.
பின்னர் சேலத்திற்கு விரைந்த நாகப்பட்டினம் காவல் அதிகாரிகளிடம் குமாரை ஒப்படைத்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2002 ஆம் வருடத்தில் இரட்டை கொலை செய்த வழக்கில் சிக்கிய குமாருக்கு ரவுடிகளின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Nagapattinam rowdy arrest by police