விரட்டியெடுத்த நாய்.. 18 பேர்களை கடித்து குதறி பரபரக்க சம்பவம்.!
Nagapattinam New Bus Stand Dog Byte Peopels 12 April 2021
வெறி நாய் கடித்ததில் ஒரே நேரத்தில் 18 பேர் காயமடைந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
நாகப்பட்டினத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் தேநீர் கடைக்கு கடைக்கு முன்பு பொதுமக்கள் நின்று தேநீர் குடித்துக்கொண்டு இருந்துள்ளனர். இதன்போது, அங்கு நாய் ஒன்றும் நின்று கொண்டு இருந்தது.
இந்நிலையில், திடீரென நாய் அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி கடிக்க தொடங்கியது. நாயின் கடியிலிருந்து தப்பிக்க பலரும் முயற்சித்த நிலையில், எதுவும் பலனில்லாமல் போயுள்ளது. இதனையடுத்து மொத்தமாக சுமார் 18 பேரை அந்த நாய் கடித்து குதறியுள்ளது.
இதனையடுத்து கடிபட்டவர்கள் அனைவரும் அவசர ஊர்தி மூலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நாய்க்கு வெறி பிடித்து இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள், கல் மற்றும் கட்டையால் நாயை அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Nagapattinam New Bus Stand Dog Byte Peopels 12 April 2021