காஞ்சிபுரம் அருகே திமுக கவுன்சிலர் குத்தி கொடூர கொலை! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த நடுவீரப்பட்டு எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ். 31 வயதாகும் இவர் நடுவீரப்பட்டு ஏழாவது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.

மேலும் திமுகவின் வார்டு செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அதே பகுதியில் வசிக்கக்கூடிய எஸ்தர் என்ற லோகேஸ்வரி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

எஸ்தர் அந்த பகுதியில் சட்டவிரவாதமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக காவல்நிலையித்தில் சதீஷ் புகார் அளித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பகை மூண்ட நிலையில், சம்பவம் நடந்த நேற்று சமாதான பேச்சுவார்த்தைக்கு வருமாறு சதீஷை எஸ்தர் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.

இதனை நம்பி வந்த சதீஷ், வீட்டில் நுழைந்ததும் கதவை தாப்பால் போட்டு, வீட்டில் இருந்த மர்ம நபர்கள் சதீஷை அறிவாளர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

பின்னர் சதீஷின் உடலை தரதரவென இழுத்து வந்து, ரோட்டில் போட்டுவிட்டு அந்த மர்ம கும்பலும், எஸ்தரும் தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சதீஷின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சதிஷ் கொலை செய்பட்டத்திற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள எஸ்தர், மர்ம கும்பல் கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

naduveerapattu sathish murder case kanjipuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->