காஞ்சிபுரம் :: மூதாட்டியை கொடூரமாக கொன்று 15 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூதாட்டியை கொடூரமாக கொன்று 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மேலேரி பகுதியை சேர்ந்தவர் யசோதா(80). இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் வெளியூர்களில் உள்ளனர். இந்நிலையில் யசோதாவின் வீடு நேற்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை.

இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் யசோதாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது, யசோதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசார், யசோதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், யசோதாவின் தலையில் கல்லைப் போட்டு மர்ம நபர்கள் யாரோ கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது.

மேலும் அவரது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 15 சவரன் தங்க நகைகள் கொலையடிக்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், யசோதாவை கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mysterious persons who brutally murder the old woman and took away 15 Savaran jewels in kanchipuram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->