உதகையில் வியாபாரிகளை அரிவாளால் வெட்டி விட்டு ரூ.30 லட்சத்துடன் தப்பிய மர்ம கும்பல்! - Seithipunal
Seithipunal


திருச்சியில் இருந்து உதகைக்கு வந்த இரண்டு வியாபாரிகளை அரிவாளால் வெட்டி விட்டு ரூ. 30 லட்சம் ரொக்கத்துடன் தப்பி சென்ற மர்ம கும்பல் குன்னூர் அருகே பிடிபட்டனர்.  

திருச்சி அருகே மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் யுவராஜ். இவர்கள் உதகையில் இருந்து திருச்சிக்கு காய்கறி அனுப்பும் வியாபாரிகளுக்கு சேர வேண்டிய பணத்தை திருச்சியில் வசூல் செய்து, அதனை உதகையில் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

இந்த நிலையில், இன்று அதிகாலை அவர்கள் ரூபாய் 30 லட்சம் தொகையுடன் பேருந்தில் உதகை வந்து கொண்டிருந்தனர். அப்போது காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு பணப் பையுடன் தப்பியுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, உதகையில் இருந்து வெளி மாவட்டம் செல்லும் அனைத்து சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

காவல்துறையினரின் இந்த சோதனையில் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் அந்த மர்ம நபர்கள் சென்ற கார் பிடிபட்டது. இதன் பின்னர், காரில் இருந்த 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்த ரூ. 30 லட்சம் தொகையை காவல்துறையினர் கைப்பற்றினர். பின்னர் அவர்கள் உதகை காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். காயமடைந்தவர்கள் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mysterious gang escaped with Rs 30 lakh in Trichy


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->