திருவாரூர்: மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் பலி.!
Motorcycles accident in thiruvarur
திருவாரூரில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மதன்ராஜ்(20) என்பவர் வலங்கைமானில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒன்று மதன்ராஜ் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த மதன்ராஜை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Motorcycles accident in thiruvarur