திருவாரூர்: மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் பலி.! - Seithipunal
Seithipunal


திருவாரூரில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மதன்ராஜ்(20) என்பவர் வலங்கைமானில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒன்று மதன்ராஜ் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் பலத்த காயமடைந்த மதன்ராஜை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Motorcycles accident in thiruvarur


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->