அறை முழுவதும் ரத்த கறை..தூக்கில் சடலமாக கிடந்த தாய்.,5 வயது மகள் மர்ம மரணம், நடந்தது என்ன.?
mother suicide 5 years old girl dead in kovai
தமிழகத்தின் கோவை ஒண்டிப்புதூர் அருகில், பெண் ஒருவர் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியிருக்கிறார். இந்த நிலையில், அவரது ஐந்து வயது மகளின் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ காமாட்சி நகரை சேர்ந்த வேதவள்ளி என்பவர். இவரது கணவர் அமெரிக்காவில் வேலை பார்த்த போது இறந்து விட்ட நிலையில், ஐந்து வயது மகள் கார்குழலியுடன் தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் அவர் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு இரண்டு மணியளவில் அவர்கள் வீட்டில் தகறாறு ஏற்பட்டதாகவும், சற்று நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமெனக் கூறி எதிர் வீட்டில் கார் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பின்னர் கால் டாக்ஸியில் வேதவள்ளியின் தம்பி மற்றும் தந்தை குழந்தையை தூக்கிச் சென்றதாகவும், வேதவள்ளியின் தம்பி மாதவனுக்கு தலையில் ரத்தக் காயங்கள் இருந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து காலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டுக் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீசார் கதவு உட்புறம் தாழிட்டிருக்கவே ஜன்னலை உடைத்து பார்த்தபோது வேதவள்ளி சடலமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.
பின்னர் பூட்டை உடைத்து போலீசார் உள்ளே நுழைந்த போது வீட்டில் ஆங்காங்கே ரத்தக் கறைகளுடன் டிவி உள்ளிட்டவை உடைக்கப் பட்டிருந்துள்ளது. வேதவள்ளியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்த போலீசார் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்து வருகின்றனர்.
இதனிடையே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேதவள்ளியின் மகளும் உயிரிழந்துள்ளார். மருத்துவமனைக்கு வரும் போதே குழந்தை உயிரிழந்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து வேதவள்ளியின் தந்தை மற்றும் தம்பியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
English Summary
mother suicide 5 years old girl dead in kovai