கோவிலுக்கு சென்றபோது விபரீதம்.! லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து.! தாய்-மகன் பலி..! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் கோவிலுக்கு சென்றபோது லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில் தாய்-மகன் உயிரிழந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் ஆதியூர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி பரிமளா (40). இவர்களது மகன் அருண் ராஜ் (19). இந்நிலையில் பழனிவேல் குடும்பத்தினருடன் நேற்று இரவு காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றார். அப்பொழுது இன்று அதிகாலை 3 மணியளவில் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கார் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், அருண் ராஜ் மற்றும் தாயார் பரிமளா ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பழனிவேல் மற்றும் கார் ஓட்டுநர் விக்கி ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பலத்த காயமடைந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த தாய்-மகன் இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother son killed in car lorry collision in Cuddalore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->