'குடியை கெடுத்த குடி'.! அழுகிய நிலையில் கிடந்த மனைவி மற்றும் மகள் .! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே கணவர் எப்போதும் குடித்து விட்டு வந்து தகராறு செய்வதால், மனமுடைந்த மனைவி அவர் மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டாச்சிபுரம், பாரத் பெட்ரோலியம் எதிரே இருக்கின்ற விவசாய கிணற்றில் பெண் மற்றும் சிறுமியின் சடலங்கள் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதை தொடர்ந்து, உயிரிழந்தவர்கள் கெடார் பகுதியை சேர்ந்த காத்தவராயன் என்பவரின் மனைவி ஆனந்தி மற்றும் அவர்களது 5 வயது மகள் சுமித்ரா எனவும் தெரியவந்தது.

இது குறித்து விசாரணையில்,  குடித்துவிட்டு வீடு வரும் கணவனை பலமுறை எச்சரித்தும் திருந்தாததால், மனமுடைந்த ஆனந்தி கடந்த 3 நாட்களுக்கு முன் மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது.

ஆனால் அதுகுறித்து அவரது கணவர் புகார் எதுவும் தெரிவிக்காமல் இருக்கவே சந்தேகமடைந்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother and daughter suicide in villupuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->