கிருஷ்ணகிரி.! மொபட் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொபட்மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்து உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கீர்ணப்பள்ளி பகுதியை சேர்ந்த நச்சுண்டப்பா என்பவரின் மகன் மகேஷ் (18). இவர் நேற்று மாலை சித்தியுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது உத்தனப்பள்ளி அருகே சென்ற போது, அந்த வழியாக சாமந்திப்பூ ஏற்றி வந்த வேன் ஒன்று மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மகேஷ் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார் 

மேலும் அவரது சித்தி படுகாயம் அடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moped van accident in kirishnagiri


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->