மொபட் மீது லாரி மோதி விபத்து.! பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை போரூரை அடுத்த பூதான்பட்டு பகுதியை சேர்ந்தவர் அம்மையப்பன்(42). இவரது மாமியார் பெத்தனாச்சி(57). இவர்கள் நேற்று மொபட்டில் காஞ்சிபுரம் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். 

அப்பொழுது சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டநிலையில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moped lorry accident in kanchipuram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->