மீஞ்சூரில் செல்போன் திருட்டு! வாலிபரை கைது செய்து காவல்துறை விசாரணை.!
Minjur cellphone theft
சென்னை மீஞ்சூரில் செல்போன் திருடிய வாலிபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே நடந்து சென்ற போது, வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளார்.
இதுதொடர்பாக சரவணன் அளித்த புகாரின் பேரில் மீஞசூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று நடத்திய விசாரணையில், செல்போனை பறித்து சென்றது அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் என்பது தெரிந்தது. அதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.